தாய், மகனை தாக்கியவர் கைது

தாய், மகனை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-28 16:00 GMT

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்மேரி (வயது 60). இவரது மகன் இருதயராஜ். பந்தல் அமைக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று ஜேம்ஸ்மேரி வசிக்கும் பகுதியில், செந்தில்குமார் (34) என்பவர் தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். ஊர்க்காரர்கள் சமாதானம் செய்து வைத்தனர். சமாதானம் செய்தவர்களில் ஜேம்ஸ்மேரியும் ஒருவர்.

இந்த நிலையில், ஜேம்ஸ்மேரி வீட்டு வாசலுக்கு சென்ற செந்தில்குமார்,'எங்கள் குடும்ப பிரச்சினையில் ஏன் தலையிடுகிறீர்கள்?' என கேட்டு கையில் வைத்திருந்த கட்டையால் ஜேம்ஸ்மேரியை தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க வந்த மகன் இருதயராஜையும் அவர் தாக்கினார். காயம் அடைந்த தாய், மகன் இருவரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்