லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அரியாங்குப்பம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-01 17:12 GMT

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அடுத்த காக்காயன்தோப்பு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அரியாங்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 46) என்பதும், தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,500, விலை உயர்ந்த செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்