மனைவி, மகள் மீது தாக்குதல்

மூலக்குளம் அரும்பார்த்தபுரம் அருகே வீட்டை காலி செய்யச்சொல்லி மனைவி, மகள் மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-04-12 16:57 GMT

மூலக்குளம்

புதுச்சேரியை அடுத்த அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரை சேர்ந்தவர் உதய சரவணன் (வயது 48). தொழிலாளி. இவருக்கு கீதா (46) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து அவரது வீட்டுக்கு அருகே உள்ள மற்றொரு வீட்டில் தனது மகள் குணவதியுடன் கீதா வசித்து வருகிறார்.

இந்த நிலையில் உதயசரவணன், அவரது மகன் குகன் ஆகியோர் வீட்டை காலி செய்யுமாறு கூறி கீதா, குணவதியை தரக்குறைவாக திட்டியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.

இது குறித்து கீதா அளித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்