தாய், மகள் மீது தாக்குதல்

தாய், மகள் மீது தாக்குதல் குறித்து போலீசார் விசாரைணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-08 17:39 GMT

புதுச்சேரி

புதுச்சேரி லப்போர்த் வீதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகள் நான்சி (வயது 40). இவர் திருமணம் ஆன பின்னர் அவ்வப்போது மொரீசியஸ் நாட்டிற்கும், புதுச்சேரிக்கும் சென்று வருவார். நேற்று நான்சி பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தார். அதனை தனது தாயார் ராணியுடன் சேர்ந்து முதல் மாடிக்கு எடுத்துச் சென்றார்.

அப்போது அங்கு வந்த பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சுமதி, முன்விரோதம் காரணமாக நான்சியை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுமதி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுத்த அவரது தாயாரையும் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்