மேற்கு வங்காளம்: வெற்றியை நோக்கி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

மேற்கு வங்காள மாநிலத்தில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யூசுப் பதான் மற்றும் கீர்த்தி ஆசாத் வெற்றி பெறும் வாய்ப்பில் உள்ளனர்.

Update: 2024-06-04 10:25 GMT

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்காளத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கீர்த்தி ஆசாத் மற்றும் யூசுப் பதான் இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர்.

இதில் பர்தமான்-துர்காபூர் தொகுதியில் போட்டியிடும் கீர்த்தி ஆசாத் 2-வது இடத்தில் உள்ள பா.ஜ.க. வேட்பாளரை விட 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.

மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் பராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறும் வாய்ப்பில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்