டெல்லியில் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-08-20 10:54 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு இன்று மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மத்திய டெல்லியின் சாணக்யாபுரியில் உள்ள நங்லோயில் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து மதியம் 1.04 மணிக்கும், ப்ரைமஸ் மருத்துவமனையிலிருந்து மதியம் 1.07 மணிக்கும் போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைகள் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்