கேரளாவில் 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது

Update: 2024-05-28 11:28 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவின் கோட்டயம் , எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்