திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்

செயற்கைக்கோள் ஏவப்படுவதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-08-15 08:25 GMT

திருப்பதி,

தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.17 மணிக்கு சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், புதிய செயற்கைக்கோள் ஏவப்படுவதை ஒட்டி இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்