மணிப்பூரில் நடந்த வன்முறையில் 5 பேர் பலி

மணிப்பூரின் ஜிரிபாமில் நடந்த வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2024-09-07 07:12 GMT

Image Courtacy: ANI

இம்பால்,

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

மாவட்ட தலைமையகத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தனியாக வசித்து வந்த நபரின் வீட்டிற்குள் பயங்கரவாத ஆயுதக்குழு நுழைந்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று மலை சார்ந்த பயங்கரவாதிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மணிப்பூர் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ராக்கெட் லாஞ்சர் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்