மராட்டியம்: என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2024-10-21 13:40 GMT

மும்பை,

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள். மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தீஸ்கர்-மராட்டிய எல்லைப்பகுதியான நாராயண்பூர் பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததாக அந்த அதிகாரி பிடிஐயிடம் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்