ஆந்திரா: லாரி, பஸ் மோதி கோர விபத்து - 8 பேர் பலி

ஆந்திராவில் லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-09-13 11:07 GMT

அமராவதி,

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி இன்று மாலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

சித்தூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மொலிகி கட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதேவேளை, விபத்துக்குள்ளான பஸ் மீது பின்னால் வந்த மற்றொரு லாரியும் மோதியது.

இந்த கோர விபத்தில் 8 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்