ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.;

மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 150 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 340 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 466 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 806 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
367 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 420 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 198 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 24 ஆயிரத்து 507 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
128 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 493 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 460 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 983 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றம் பெற்று வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.