வெள்ள நிவாரணம்; ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை,
வெள்ள நிவாரண தொகையை ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எந்த நிபந்தனையும் இன்றி, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண தொகையை வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.