விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ரைபகினா

ரைபகினா அரையிறுதியில் பார்போரா கிரெஜிகோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Update: 2024-07-11 01:33 GMT

image courtesy: AFP

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) விரட்டியடித்து 2-வது முறையாக அரையிறுதியை எட்டினார்.

இவர் அரையிறுதியில் பார்போரா கிரெஜிகோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்