நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோத உள்ளார்.

Update: 2024-08-11 18:05 GMT

Image Courtesy: @NBOtoronto

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான பெய்டன் ஸ்டெர்ன்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் பெய்டன் ஸ்டெர்ன்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்