ஹாங்சோ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இணை

ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-09-25 03:28 GMT

Image Courtesy: AFP 

பீஜிங்,

ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் இணை, ஜெர்மனியின் கான்ஸ்டான்டின் பிரான்ட்சன் - ஹென்ட்ரிக் ஜெபன்ஸ் ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த இந்திய இணை, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-7 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 4-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் இணை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்