சீனா ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட அரினா சபலென்கா

அரினா சபலென்கா (பெலாரஸ்) - செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

Update: 2024-10-05 06:21 GMT

Image Courtesy: AFP

பீஜிங்,

சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கரோலினா முச்சோவாவும், ஆட்டத்தின் 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் அரினா சபலென்காவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.

இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் அபாரமாக செயல்பட்ட கரோலினா முச்சோவா 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வி கண்ட சபலென்கா தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்