சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை: வெற்றி பாதைக்கு திரும்புமா இந்திய அணி?

இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா கண்டுள்ளது.

Update: 2022-10-27 18:33 GMT

Image Courtesy: PTI  

ஜோகூர்,

21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10-வது சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை தொடர் தற்போது மலேசியாவின் ஜோகூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் மலேசியாவை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. பின்னர் ஜப்பான் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி இருந்தது.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி - ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கடைசி கட்டத்தில் கோல் அடிக்க, போட்டி 5-5 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை இன்று எதிர்கொள்கிறது. 4 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா என புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்