பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது

Update: 2024-10-06 11:51 GMT

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது .  அந்த அணியில் நிடா தர் 28 ரன்கள் எடுத்தார்.  இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய அருந்தாதி ரெட்டி 3 விக்கெட் , ஷ்ரேயன்கா பட்டில் 2 விக்கெட் வீழ்த்தினார் தொடர்ந்து 106 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது 

Tags:    

மேலும் செய்திகள்