தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்கின் 3வது சீசன் தொடங்கும் தேதி அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

Update: 2024-06-07 12:15 GMT

Image Courtesy: @SunrisersEC

கேப்டவுன்,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் அடுத்த சீசன் தொடங்கும் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்