வேதனை தரும் தோல்வி..! நாங்கள் வலிமையுடன் மீண்டு வருவோம் - சூர்யகுமார் யாதவ்

நாட்டிற்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன்.நாங்கள் வலிமையுடன் மீண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-11 05:08 GMT

Image Tweet : Surya Kumar Yadav  

அடிலெய்டு

 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

வேதனை தரும் தோல்வி.நாங்கள் எங்கு விளையாடினாலும் பரவசமான சூழலை உருவாக்கும் எங்கள் ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.அணியினரின் மற்றும் ஆதரவு ஊழியர்களின் கடின உழைப்பு,, ஒருவருக்கொருவர் இடைவிடாத ஆதரவுக்கு நன்றி. நாட்டிற்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன்.நாங்கள் வலிமையுடன் மீண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்