சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவிப்பு: இந்தியா 2-வது இடம் பிடித்து சாதனை

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.

Update: 2024-10-13 10:59 GMT

ஐதராபாத்,

வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது. குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்தியா ஐதராபாத்தில் நேற்று நடந்த கடைசி டி20 ஆட்டத்தில் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில், கேப்டன் சூர்யகுமார் யாதவ்-சஞ்சு சாம்சன் ஜோடி, வங்காளதேச அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தது. சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள்(8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) விளாசினார். பின்னர் மஹ்முதுல்லாவின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக ஆடி ரன் மழை பொழிந்த சஞ்சு சாம்சன், 47 பந்துகளில் 111 ரன்கள்(11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த 2வது அணி என்று இந்தியா சாதனை படைத்துள்ளது ஐ.சி.சி.யின் முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற ஒரு அணி எடுத்த அதிகபட்சரன்னாகவும் பதிவானது.2023-ம் ஆண்டு ஹாங்சோவில் நடந்த மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள அணி 3 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்ததே சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்ச ரன்னாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்