சீனாவில் மாணவர்கள் மீது பஸ் மோதியதில் 10 பேர் பலி

மாணவர்கள் மீது பஸ் மோதிய சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-09-03 07:55 GMT

பிஜீங்,

கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் ஒரு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை 7 மணிக்கு பள்ளியின் வாயிலில் பஸ்சிற்காக மாணவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பஸ் ஒன்று மாணவர்கள் மீது மோதியது. இதில் குறைந்தது 10 மாணவர்கள் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ் மாணவர்களை ஏற்றி செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிக மாணவர்கள் ஏற்றப்பட்ட பள்ளி பஸ் மற்றும் மோசமாக வடிவமைகப்பட்ட கட்டிடங்கள் உள்பட பள்ளி பாதுகாப்பு சீனாவில் நீண்ட காலமாக ஒரு பிரச்சினையாக உள்ளது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்