புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனாவுக்கு பலி

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனா பாதிப்பு காரணமாக பலியானார்.

Update: 2020-12-31 01:50 GMT
லூக் லெட்லோ
வாஷிங்டன், 

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடந்த தேர்தலில், லூசியானா மாகாணத்தில் இருந்து குடியரசு சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானவர் லூக் லெட்லோ. இவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை எம்.பி.யாக பதவியேற்க இருந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி லூக் லெட்லோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து, உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே கடந்த 23-ந் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை லூக் லெட்லோ, உயிரிழந்ததார். அவரது மறைவுக்கு, லூசியானா மாகாண கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்