அருமனை அருகே வாழைகுலையை திருடிய வாலிபர் கைது

அருமனை அருகே வாழைகுலையை திருடிய வாலிபர் கைது

Update: 2022-05-27 20:29 GMT

அருமனை, 

அருமனை அருகே செறியகொல்லை புன்னாகரை பகுதியை சேர்ந்தவர் நேசமணி. இவருடைய மகன் சிபு (வயது 30). சம்பவத்தன்று இவர் அங்குள்ள ஒரு வாழை தோட்டத்தில் வாழை குலைகளை வெட்டி திருடி சென்றுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை கையும், களவுமாக பிடித்து அருமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிபுவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்