நாகர்கோவிலில்கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

நாகர்கோவிலில்கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-19 21:33 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 61). இவருடைய தம்பி திருமலை நகரைச் சேர்ந்த கணபதி (52). இவர்கள் 2 பேரும் கட்டிடத் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் இடலாக்குடி சந்திப்பு பகுதியில் நடைபெற்ற ரெயில்வே கட்டிடபணியில் ஈடுபட்டிருந்த போது சொக்கலிங்கம் எதிர்பாராத விதமாக சன்சைடு ஸ்லாப்பில் இருந்து தவறிவிழுந்தார். இதில் அவருக்கு கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சொக்கலிங்கம் இறந்து விட்டதாக கூறினார். .இதுகுறித்து கணபதி கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்