தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

புளியரையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-05 19:00 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோநகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஜெயராஜ் (வயது 32). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

ஜெயராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் வந்த ஜெயராஜ் தனது வீட்டில் உள்ள தகர செட் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்