மகளிர் உரிமைத் திட்டம்....பாஜக நிலைப்பாட்டை தெரிவிக்க முத்தரசன் வலியுறுத்தல்

அண்ணாமலை இத்திட்டம் குறித்து தனது நிலைபாட்டை வெளிப்படுத்திட வேண்டுகிறோம். என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-16 16:52 GMT

சென்னை,

இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பலவற்றை நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசு, தற்போது முத்திரை பதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கின்றது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் உட்பட தகுதி வாய்ந்த ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் தாய்மார்களும், சகோதரிகளும் பயன் அடைகின்றனர். மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் ஆண்டுக்கு பணிரண்டாயிரம் ரூபாய் ஒவ்வொருவரும் பயன் பெறுகின்றனர்.

தமிழக அரசு மேற்கொண்ட இத்தகைய புரட்சிகரமான திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியிருப்பதன் மூலம் இத்திட்டம் எத்தகைய வரவேற்பை பெற்றுள்ளது என்பதை உணர முடியும். தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இத்திட்டத்தை வரவேற்கிறதா அல்லது எதிர்க்கின்றதா என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதேபோன்று ஒன்றியத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக இத்திட்டம் குறித்து தனது நிலை என்னவென்பதனையும் பகிரங்கமாக தெரிவித்திடல் வேண்டும். நாள்தோறும் அறிக்கைகளும், பேட்டிகளும் அளித்து வரும் பாஜகவின் மாநில நியமன தலைவர்அண்ணாமலை இத்திட்டம் குறித்து தனது நிலைபாட்டை வெளிப்படுத்திட வேண்டுகிறோம். எனமுத்தரசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்