தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தஞ்சை அருகே திருமணமான 3 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2022-08-29 21:05 GMT

வல்லம்;

தஞ்சை ரெட்டிபாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (வயது32). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை புலிவலம் காந்திநகரை சேர்ந்த நீலவாணன் மகள் சுடர்மணி (29) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுதர்சனுக்கும் அவரது மனைவி சுடர்மணிக்கும் குடும்ப பிரச்சினை இருந்தது. நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே மீண்டும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுடர்மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுடர்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து சுடர்மணியின் தந்தை நீலவாணன் (56) தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கள்ளப்பெரம்பூா் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுடா்மணிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் ரஞ்சித் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்