மின்சாரம் தாக்கி பெண் சாவு

மறைமலைநகரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.

Update: 2022-08-06 08:54 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பூங்குன்றனார் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்ச்சை போட்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி்த்தனர். அங்கு அவரை பரிசோதி்த்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்