கார் மோதி பெண் சாவு

எட்டயபுரம் அருகே கார் மோதி பெண் இறந்தார்.

Update: 2023-06-18 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 44). இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை எட்டயபுரம் மேல ஈரால் விலக்கு அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று மாரியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்