மறைந்தும் மக்கள் பசியாற்றும் கேப்டன்: நினைவிடத்தில் அன்னதானம்

விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-01-01 10:58 GMT

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த், இரு மகன்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கேப்டன் நினைவிடத்தில் கதறி அழுத இளைய மகனுக்கு பிரேமலதா ஆறுதல் கூறி தேற்றினார்.

விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம் வழங்கினார். அன்னதானத்தை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் கேப்டன் மறைந்தும் எங்களுக்கு அன்னதானம் வழங்குகிறார் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். தொண்டர் ஒருவர் கேப்டன் நினைவிடத்தில் அமர்ந்து பசியாறியது காண்போரை கண்கலங்க வைத்தது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்