இந்துஸ்தான் வர்த்தக சபையின் புதிய தலைவராக வி.நாகப்பன் பதவி இன்று ஏற்கிறார்

சென்னையில் உள்ள இந்துஸ்தான் வர்த்தக சபையின் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2022-09-29 19:59 GMT

சென்னை,

சென்னையில் உள்ள இந்துஸ்தான் வர்த்தக சபையின் பொதுக்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நிதி சேவை நிபுணர் வி.நாகப்பன் பதவி ஏற்கிறார்.

புதிய நிர்வாக உறுப்பினர்களாக அடுத்த ஆண்டுக்கான தலைவர் விஜய் சோர்டியா, மூத்த துணைத்தலைவர் லினேஷ் சனத்குமார், துணைத்தலைவர் ரமேஷ் துகர், பொருளாளர் பிரவீன்குமார் டாட்டியா ஆகியோரும் பொறுப்பேற்கிறார்கள்.

தொடர்ந்து நடக்கும் 76-வது வருடாந்திர கூட்டத்தில் தலைமை விருந்தினராக தமிழக அரசின் சிறு தொழில் துறை செயலாளர் அருண்ராய் கலந்துகொண்டு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து பேசுகிறார்.

கூட்டத்தில் கவுரவ விருந்தினர்கள் தொழில் அதிபர் எம்.பொன்னுசாமி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தலைவர் சத்யஜித் திரிபாதி ஆகியோர் பேசுகிறார்கள். தொடக்கத்தில் இதுவரை தலைவராக இருந்த சி.ஏ.கே.சுரேஷ் வரவேற்று பேசுகிறார். இறுதியில் புதிய தலைவர் வி.நாகப்பன் நன்றி கூறுகிறார்.

மேற்கண்ட தகவலை செயலாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்