வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2023-01-04 18:45 GMT

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், 1.1.2023 முதல் 31.3.2023 வரை காலாண்டிற்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி இறுதி வகுப்பு தோல்வி, 10-ம் வகுப்புதேர்ச்சி, 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பொதுபிரிவினருக்கும், இதே கல்வித்தகுதிகளை பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் (பொதுவானவர்களுக்கு) இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. வயது வரம்பு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இதர வகுப்பினருக்கு 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயிலும் மாணவராக இருத்தல் கூடாது. உதவித்தொகை பெறவிரும்புவோர்அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவராக இருத்தல் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் ஆவர். விருப்பம் உள்ளவர்கள் tnvelaivaaippu.gov.in என்ற இணையதள மூலம் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்