மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்கவிழுப்புரம் மாவட்ட அணி வீரர்களுக்கான தேர்வுநாளை நடக்கிறது

மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்க விழுப்புரம் மாவட்ட அணி வீரர்களுக்கான தேர்வு நாளை நடக்கிறது.

Update: 2023-07-27 18:45 GMT


சேலத்தில் வருகிற 12.8.2023 முதல் 15.8.2023 வரை 18 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் விழுப்புரம் மாவட்ட அணி வீரர்களுக்கான தேர்வு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கைப்பந்து திடலில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ளும் வீரர்கள் 1.1.2006-க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதால் ஆதார் அடையாள அட்டை அல்லது வயது நிரூபிக்கும் சான்றிதழை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். இந்த தகவலை மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்