217 இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

Update: 2022-09-15 08:30 GMT

சென்னை,

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்