தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

Update: 2022-08-15 19:39 GMT

ஆத்தூர்:-

சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் வானவில் தந்தை தங்கவேல் நூற்றாண்டு விழா மற்றும் அவரது தாயார் மறைந்த அங்கம்மாள் பட திறப்பு விழா ஆத்தூர் நகர சபை அண்ணா கலையரங்கில் நடந்தது. திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அறிவுச்செல்வம் வரவேற்றார். விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். கி.வீரமணி பேசுகையில், தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்க பாடுபட வேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார். விழாவில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்