வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவில் தேர்பவனி

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவில் தேர்பவனி

Update: 2022-09-08 20:28 GMT

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்தமாதம் 29-ந்தேதி மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. விழாவில் ேநற்று இரவு 7 மணிக்கு ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது. மதுரை- திண்டுக்கல் நகர்புற சாலை வழியாக பழையநீதிமன்றம் வரை சென்று திரும்பியது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் அந்தோணி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை வளன், உதவி பங்குதந்தை குழந்தையேசுதாஸ் அடிகளார் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

மேலும் மதுரை அண்ணாநகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்