தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

Update: 2023-08-16 18:27 GMT

கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம், தாளப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், எல்லமேடு, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், க.பரமத்தி, நெடுங்கூர், கரூர் ஜவுளிப்பூங்கா, மணல்மேடு, காக்காவாடி, தும்பிவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்