வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-27 20:50 GMT

மீன்சுருட்டி:

வீட்டில் புகுந்த மர்ம நபர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே படநிலை கிராமத்தில் உள்ள முதலியார் தெருவை சேர்ந்தவர் சீதாராமன்(வயது 55). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சீதாராமன் குடும்பத்தினர் வீட்டில் படுத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு சீதாராமனின் மூத்த மகள் சாருலதா (வயது 17) கண் விழித்து பார்த்துள்ளார்.

அப்போது வீட்டில் யாரோ மர்ம நபர் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனால் மற்றவர்கள் எழுந்து வருவதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடியதாக தெரிகிறது. உடனடியாக சீதாராமன் பீரோ இருந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது.

நகை-பணம் கொள்ளை

மேலும் பீரோவில் இருந்த சங்கிலி, ஜிமிக்கி, தோடு உள்பட 3¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.21 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் பின்பக்க கதவை மர்ம நபர் கடப்பாரையால் உடைத்து, வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்