ஏரியில் பிணமாக மிதந்த தொழிலாளி

ஏரியில் பிணமாக மிதந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-06 18:28 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் கலியமூர்த்தி(வயது 42). தொழிலாளியான இவர் ஆவேரியில் பிணமாக மிதந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்