பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி

சொக்கம்பட்டி அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலியானார்.

Update: 2023-03-28 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் நாடார் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 55). இவர் ஊர் ஊராக சென்று பனை மரத்தில் நுங்கு பறித்து விற்பனை செய்து வருவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று சொக்கம்பட்டியை அடுத்த புன்னையாபுரம் பாலம் அருகில் உள்ள பனைமரம் தோப்பில் நுங்கு வெட்டுவதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தாா். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் விரைந்து வந்து மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்