லாரி மோதி வாலிபர் சாவு

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-13 17:35 GMT

காவேரிப்பட்டணம்

போச்சம்பள்ளி தாலுகா சின்ன பாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் கிருபானந்தன் (வயது 18). இவரும், அதே பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (19) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் பெரிய கரடியூர் பக்கமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்ற கிருபானந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற விமல்ராஜ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்