ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது.

Update: 2023-08-27 22:22 GMT

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது.

விலை குறைந்தது

ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ராமேசுவரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மேலும், அணை மீன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விற்பனை மும்முரமாக காணப்படும்.

இந்தநிலையில் நேற்று மீன் மார்க்கெட்டுக்கு 16 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரத்து அதிகமாக இருந்ததால் மீன்களின் விலையும் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை குறைந்தது. குறிப்பாக வஞ்சிரம் மீன் கிலோவுக்கு ரூ.400 குறைந்தது. கடந்த வாரம் ரூ.1,200-க்கு விற்பனையான ஒரு கிலோ வஞ்சிரம் மீன் நேற்று ரூ.800-க்கு விற்பனையானது.

பொதுமக்கள் கூட்டம்

பொதுமக்களும் ஆர்வமாக வந்து மீன்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

இதேபோல் ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அயிலை - ரூ.300, மத்தி - ரூ.250, விலாங்கு மீன் - ரூ.450, தேங்காய் பாறை - ரூ.450, இறால் - ரூ.650, சிறிய இறால் - ரூ.500, சீலா - ரூ.350, வெள்ளை வாவல் - ரூ.600, கருப்பு வாவல் - ரூ.500, பாறை - ரூ.300, கிளி மீன் - ரூ.500, மயில் மீன் - ரூ.600, திருக்கை - ரூ.300, நெத்திலி - ரூ.250

இதேபோல் நண்டு ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்