மது விற்றவர் பிடிபட்டார்

மது விற்றவர் பிடிபட்டார்

Update: 2023-08-21 20:30 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே உள்ள சிங்காநல்லுார் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர், ராமநாதபுரத்தை சேர்ந்த கோகுல்முனிஸ்(வயது 22) என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 2 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,420 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்