கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு

ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-04 18:45 GMT

தியாகதுருகம்

ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ராமலிங்கம்(வயது 38). விவசாயியான இவர் நேற்று அதே பகுதியில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி அங்குள்ள கிணற்றில் விழுந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாத ராமலிங்கம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய முன்னணி வீரர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ராமலிங்கத்தின் உடலை மீட்டு பாசார் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலுவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்