ஏரியில் மூழ்கி விவசாயி பலி

சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-11 18:45 GMT

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே மேலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62) விவசாயி. இவர் தனது விவசாய நிலம் அருகில் உள்ள ஏரியில் கை,கால் கழுவுவதற்காக சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் அவர் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக அவர் இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரிக்குள் இறங்கி கணேசனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனிடையே தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்