தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியின் போது தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2022-11-02 18:33 GMT

ஆலங்குடி அருகே தெற்கு மேலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 52). தொழிலாளி. இவர், ஆலங்குடி அருகே தெட்சிணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இருதயபுரம் கிராமத்தில் புதிதாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்து. இந்நிலையில் அதில் அமைக்கப்பட்டு இருந்த சாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு ெகாண்டிருந்த போது மருதமுத்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மருதமுத்து நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்