பரங்கிப்பேட்டை அருகேவாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் சாவுபோலீசார் விசாரணை
பரங்கிப்பேட்டை அருகே வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் உயிரிழந்தார்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அருகே உள்ள சில்லாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் மணிகண்டன் (வயது 29). சரக்கு வாகன டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு ரெயிலடி ஓரம் உள்ள ஐந்துகண்ணு வாய்க்கால் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலைதடுமாறி வாய்க்காலில் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் தண்ணீரில் மூழ்கி அவர் இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்து போன மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி கண்ணன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.