நாய் குறுக்கே வந்ததால் சரக்கு வாகனம் மின்கம்பத்தில் மோதியது; 20 பேர் படுகாயம்

நாய் குறுக்கே வந்ததால் சரக்கு வாகனம் மின்கம்பத்தில் மோதியதில், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-23 20:05 GMT

நம்பியூர்

நாய் குறுக்கே வந்ததால் சரக்கு வாகனம் மின்கம்பத்தில் மோதியதில், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெண் பார்ப்பதற்காக...

நம்பியூர் அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் அருண் (வயது 28). இவர் தனக்கு பெண் பார்ப்பதற்காக உறவினர்கள் 20 பேரை தன்னுடைய சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊஞ்சப்பாளையத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

குருமந்தூர் மேடு காளியம்மன் நகர் அருகே சென்றபோது நாய் ஒன்று திடீரென ரோட்டில் குறுக்கே ஓடிவந்தது. நாயின் மீது சரக்கு ஆட்டோ மோதிவிடக்கூடாது என்பதற்காக அருண் பிரேக் போட்டார்.

20 பேர் படுகாயம்

திடீரென பிரேக் போடப்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் ரோட்டோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வானத்தில் பயணம் செய்த 10 ஆண்கள், 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கும் அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்